
Wednesday, February 26, 2014

Unknown
பயபக்தி என்று சொல்வது ஏன்?
பயம் இருக்கும் இடத்தில் தவறு இருக்காது. குறித்த
நேரத்தில் பணிக்குச் சென்றுவிட்டால் யாரும் குறைகூற இடமிருக்காது. இப்படி
பொறுப்புடன் செயல்படுவதை வேலையில் பயம் இருப்பவர்களிடத்தில் மட்டுமே காணலாம். இது
பாராட்டுக்குரிய பயம்.
அதுபோல், இறைவனுக்கு பூஜை செய்யும் போது அதில் குறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற
சிரத்தையுடன் செய்தால் பக்தி முழுமை பெறுகிறது.
இந்த சிரத்தையையும் ஒருவித பயம் என்று கூறலாம். அதாவது, நாம் செய்யும் எந்த
வேலையாக இருந்தாலும் தவறு ஏற்படாமலிருக்க,
முழுக்கவனத்தையும் செலுத்திச் செய்வதை பயம் என்று
எடுத்துக் கொள்ள வேண்டும். மனபீதியைக் குறிக்கும் பயத்துடன் இதனை ஒப்பிடக்கூடாது.
எனவே, பயபக்தியுடன் வழிபடுங்கள்.